.png)

ஆசிரியர் அறிமுகம்

வணக்கம்! நான் சிந்துஜா வினோத்குமார், தமிழ் மொழியின் செழுமையும், அழகும், அதன் இலக்கியங்களில் உள்ள ஆழ்ந்த வாழ்வியல் சிந்தனைகளும் தமிழ் மொழி மீது எல்லையற்ற பற்றினை ஏற்படுத்தியதோடு அதனை அடுத்த தலைமுறையிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற பொறுப்புணர்வையும் உண்டாக்கிற்று. நான் 10+ ஆண்டுகளாக அனைத்து வயதினருக்கும் நம் தமிழ் மொழியை மகிழ்வோடு தமிழ்க்கூடம் என்ற இந்த பள்ளியின் மூலம் கற்பித்து கொண்டிருக்கிறேன். நாங்கள் வடிவமைத்த தரமான பாடத்திட்டத்தோடு மாணவர்களின் தனித்திறன் வளரவும் முனைப்பு காட்டுகிறேன். "தமிழ்த்தளிர்கள்" என்ற எங்கள் தனித்துவமான நிகழ்ச்சியின் மூலம் மாணவர்கள் முத்தமிழை கற்பதோடு திறம்பட அதனை வெளிப்படுத்தவும் பயிற்சி அளிக்கிறேன். தமிழ் மொழியின் மீது நீண்டகால பற்றை வளர்க்கும் இந்த கல்வி பயணத்தை உங்களுடனும் உங்கள் குழந்தைகளுடனும் தொடங்க தமிழ்க்கூடத்திற்கு உங்களை நான் உற்சாகமாக வரவேற்கிறேன் !
